இராணுவ பயிற்சியை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மேற்கொள்ள வேண்டும் திஸ்ஸ நாயக்க தெரிவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று (14.12.2022) வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன.

பட்டப்படிப்பை நிறைவு செய்யாத 700 முதல் 800 வரையான மாணவர்கள் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்றனர்.

இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிகளை சேர்ந்தவர்களே அவர்கள்.

இவர்கள்தான் குழப்பம் விளைவிக்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *