நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை.

இம்மாதத்தின் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 3,200 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில், கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கொழும்பு, களுத்துறை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன் காரணமாக நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அழிப்பதுடன் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.எனினும், நவம்பர் மாதத்தில் 5,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 71,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *