ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசிலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வந்த பின்னர் ஜனாதிபதியை சந்திப்பதே இதுவே முதல் தடவை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தற்போதைய நிலைமை அரசியலமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருவருக்கு இடையில் மாத்திரம் இடம் பெற்ற இந்த கலந்துரையாடல் 1 1/2 மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.