முடிந்தால் தோற்கடியுங்கள் பார்க்கலாம் நாமல் பகிரங்க சவால்!
ராஜபக்ஷர்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொது தேர்தலில் போட்டியிட்டு முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
Youtube ஒன்றின் நேர்காணலில் பங்கு பற்றிய நாமல் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். விடயதானத்திற்கு பொறுப்பான ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலில் நின்று வாக்குகளின் மூலம் ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் போராட்டத்தின் மூலம் நாடு அராஜகம் செய்வதும் விடுதலைப் புலிகளின் அமைப்பினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பும் ஒன்றுதான். முழு உலகமும் covid-19 தொற்றினால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி அந்த சவாலில் இருந்து மீள முயற்சிக்கும் வேளையில் சிலர் ஆட்சி அதிகாரத்திலிருந்து எடுக்க முடியாத அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நாமல் ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.