பேக்கரி பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாததால் பேக்கரி தொழிலாழிகள் குழப்பம்

பேக்கரி பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாததால் பேக்கரி தொழிலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை பல்வேறு மட்டங்களில் இருப்பதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் மாவின் விலை குறைந்துள்ள போதிலும் பேக்கரி உற்பத்தியாளர்கள் பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பதில் கவனம் செலுத்தாதது வேதனையளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பேக்கரி உற்பத்தியாளர்கள் ​​சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாவு தரமற்றது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *