கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிக நிறை கொண்ட தங்கம் மீட்பு நால்வர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிக நிறை கொண்ட தங்கத்துடன் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து தலா 22 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது இதன் சந்தைப் பெறுமதி 450 மில்லிய் ரூபாய் என சுங்கத்தீர்வை மதிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தல் தங்கத்துடன் நான்கு இலங்கையர்கள் விமான நிலையத்தை வந்தடைந்த போது சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யபட்டுள்ளது. அப்போது அவர்களிடம் அதிகளவான தங்கம் இருப்பது தெரிய வந்தது ,சந்தேகநபர்களில் பயண பொதிகளில் தங்கம் மறைத்து வைத்திருந்த நிலையில் அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்கள் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தங்க தொகுதி டுபாயில் இருந்து சென்னை ஊடாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *