வெளிநாட்டு மோகம். பல இலட்சங்களை இழந்த இளைஞர்கள்
நாட்டின் தற்போதய பொருளாதார நிலைமையை எதிர் கொள்ள முடியாத மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயல்கிறனர். வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது.
அவர் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில்
முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெளிநாடு செல்ல நீர்கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியிலுள்ள முகவரிடம் 60 இலட்சம் ரூபா பணத்தை வழங்கினோம்.
பல தடவைகள் தம்மை கொழும்புக்கு அழைத்து அவர்கள் அங்கு சென்றபோதும் தம்மை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் அலைக்கழித்ததாகவும் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது எம்மை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே கொடுத்த பணத்தை மீட்டுத்தந்துதவுமாறு கேட்டுள்ளார்.