கொழும்பில் 14 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்!
கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பம்பல பிட்டிய போலீசார் தெரிவித்துள்ளனர். அத்தோடு சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.