உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரேசில் வெற்றி பயணம் குறித்து நெய்மர் கூறுகையில்,

இந்த உலகக்கோப்பையில் முன்னேற வேண்டிய நேரமிது என பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.

காலிறுதியில் பிரேசில்

உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரேசில் அணி 9ஆம் திகதி குரேஷியா அணியுடன் மோதுகிறது.

சூப்பர் 16 சுற்றில் தென் கொரியாவிற்கும் பிரேசிலிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் 4-1 என்ற கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த நட்சத்திர வீரர் நெய்மர் பெனால்டி வாய்ப்பில் அபாரமாக கோல் அடித்தார்.

இதன்மூலம் ஏற்கனவே இடம்பெற்ற உலகக்கோப்பைகளில் கோல் அடித்த பீலே மற்றும் ரொனால்டோ ஆகியோரின் சாதனையுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் தனது வெற்றி பயணம் குறித்து நெய்மர் கூறுகையில்,
‘நிச்சயமாக இந்த தொடரில் நாங்கள் மேலும் முன்னேற வேண்டிய நேரம். நாங்கள் உலகக்கோப்பை குறித்து கனவு காண்கிறோம். ஆனால் படிப்படியாக செல்ல வேண்டும்.

எனது அணி நன்றாக தயாராகி கோப்பையை வெல்வதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். சாதனைகளை முறியடிப்பதில் எனக்கு ஒரு விருப்பம். நான் எதிர்பார்க்காத சில விடயங்களை சாதித்தேன். அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என நெய்மர் தெரிவித்துள்ளார்.

30 வயதாகும் நெய்மர் பிரேசில் அணிக்காக 76 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *