மகாஜன கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை மெய்வேலு போட்டியிலிருந்து நான்கு பதக்கங்களை தன் வசமாகி கொண்டனர்.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வந்த அகில  இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி நேற்று 06.12.2022 செவ்வாய்க்கிழமை நிறைவடைந்துள்ளது.

இப்போ போட்டியில் மகாஜன கல்லூரி மாணவர்கள் நான்கு பதக்கங்களை பெற்று தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவற்றுள் ஒரு தங்கப்பதக்கமும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் தமதாக்கி கொண்டனர்.

18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் சி.சுவர்ணா 3.20 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்

20 வயதுப் பெண்கள் கோலூன்றிப்பாயதலில் ச.தீபிகா 3.00 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும்

20 வயதுப் ஆண்கள் கோலூன்றிப்பாயதலில் ஜெ.கஸ்மிதன் 3.90 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும்

18 வயதுப் ஆண்கள் கோலூன்றிப்பாயதலில் ச.துசாந்தன் 4.10 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும்

பெற்றுக்கொண்டனர்.

 

மேலும் 18 வயதுப் ஆண்கள் கோலூன்றிப்பாயதலில் ந.டன்சன் 3.80 மீற்றர் உயரம் தாண்டி வர்ணசான்றிதழ் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்ததினால் பாடசாலை சமூகமும் இவர்களது பயிற்சியாளர் திரு.சின்னையா சுபாஸ்கரன் அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *